அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ட்ரம்பின் கருத்து ; ஈரானின் முக்கிய அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையாக இருந்தாலும் சரி அல்லது தனது சொந்த நிலப்பரப்பாக இருந்தாலும் சரி, எந்தவொரு தீவிரமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தங்களின் தற்காப்புத் தயார்நிலை "இப்பொழுதே" 100 சதவீதத்திற்கும் அதிகமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் விடுக்கின்ற பேச்சுக்களும், அழுத்தங்களை பிரயோகிக்கும் உத்திகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஈரான் பிரகடனப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தங்களுடன் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலை தொடரும் சூழலில், ஈரானிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
"நாட்டைப் பாதுகாப்பதற்கான பொதுமக்களின் தயார்நிலையை" வளர்ப்பதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.