ஐ.நா. கூட்டத்தில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து ; ரஷ்ய ஜனாதிபதி மாளிகை காட்டம்
ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் இழந்த அனைத்து இடங்களையும் எளிதாக மீட்கலாம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்திற்கு, ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட ட்ரம்ப், உக்ரைன் தான் இழந்த நிலப்பகுதிகளை, ஐரோப்பா மற்றும் 'நேட்டோ' எனப்படும் இராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் உதவியுடன் மீட்கலாம் என்று குறிப்பிட்டார்.
ரஷ்யா உடன்படாது
ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கு, ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ் கோவ் கூறியுள்ளதாவது, ஐ.நா. பொதுச் சபை அமர்வில், உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்ததே, ட்ரம்ப்பின் மாற்றத்திற்குக் காரணம். உக்ரைன் உடனான இராணுவ மோதல் தொடர்பான ட்ரம்பின் அனைத்து கருத்துகளுக்கும் ரஷ்யா உடன்படாது.
ரஷ்யாவே, ஒருங்கிணைந்த ஐரோப்பாவின் ஒரு பகுதிதான். அதனால், ரஷ்யாவின் பாதுகாப்பை விலையாகக் கொடுத்து, தங்கள் பாதுகாப்பை ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினர். 'ரஷ்யா கேட்கும் நிலப் பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்' என உக்ரைனிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்பு கூறியமையும் குறிப்பிடத்தக்கது.