டுவிட்டரை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த நேரிடும்?
உலகின் முதனிலை சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரை பயன்படுத்துவதற்கு இனி கட்டணம் செலுத்த நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், டுவிட்டரின் புதிய உரிமையாளருமான எலோன் மஸ்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் டுவிட்டரை பயன்படுத்தும் அரசாங்க மற்றும் வர்த்தக ரீதியான பயனர்கள் சிறு கட்டணத்தை செலுத்த நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டரை பயன்படுத்தும் சாதாரண பயனர்களுக்கு எவ்வித கட்டணமும் அறவீடு செய்யப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.
எனினும், டுவிட்டரை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களிடமிருந்து ஒரு தொகை கட்டணத்தை அறவீடு செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எலொன் மஸ்கின் இந்த கூற்று தொடர்பில் டுவிட்டர் நிறுவனம் இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எலொன் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.