பாடசாலை உப அதிபரைக் கடத்திச் சென்று தாக்குதல் ; இருவர் கைது
கம்பஹா, பியகம பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் உப அதிபரைக் கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் அவரது மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி சியம்பலாப்பே பகுதியில் வைத்துக் குறித்த உப அதிபர் வலுக்கட்டாயமாக ஜீப் ரக வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் வீடொன்றிற்கு கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 37 மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பியகம காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.