அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதியதில் இருவர் பலி
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மரானா பகுதியில் அமைந்த விமான நிலையத்தில் இரு விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
இத விமான விபத்து நேற்றியதினம் (20) இடம்பெற்றது. விமானங்கள் இரண்டும் ஒற்றை என்ஜின் கொண்டவை. இவை மோதி கொண்டதில் தீப்பிடித்து எரிந்தன. இந்தச் சம்பவத்தில் 2 விமானங்களில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் விமான நிலையம் மூடப்பட்டது.
அதேவேளை கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி வர்த்தக ஜெட் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் மோதிக்கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.
கடந்த இரு வாரங்களில் இதுபோன்ற விபத்துகளை அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை எதிர்கொண்டு வருகிறது.