பிரித்தானியாவில் நீடிக்கும் ஆபத்து: ஒரே நாளில் 335 பேர் பலி!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 335 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 49 இலட்சத்து 67 ஆயிரத்தை 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 51 ஆயிரத்து 342 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 36 இலட்சத்து 89 ஆயிரத்து 522 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 785 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 173 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 11 இலட்சத்து 26 ஆயிரத்து 953 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.