6,000 பேர் மரணத்திற்கு காரணமானவர் விளாடிமிர் புடினுக்கு கண்டனம்
உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக கூறி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே ( Rodrigo Duterte ) கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகளை மட்டுமே தாம் இதுவரை கொன்றதாகவும், ஆனால் தமது ஆட்சியில் இதுவரை சிறார்கள் முதியவர்கள் உட்பட அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்பட்டதில்லை எனவும் டுடெர்டே ( Rodrigo Duterte )குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியை தமது நண்பர் எனவும் உலக அரசியலில் தாம் மதிக்கும் நபர் எனவும் வெளிப்படையாக கூறிவந்த டுடெர்டே ( Rodrigo Duterte ), தற்போது பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய உலக எண்ணெய் விலை உயர்வுக்கு மூன்று மாத கால உக்ரைன் போர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், உக்ரைன் மீது முன்னெடுக்கப்பட்ட போருக்கு சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறுவதை ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 30ம் திகதி பதவி விலகும் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே ( Rodrigo Duterte ) 6,000க்கும் அதிகமானோரை பலிவாங்கிய கொடூரமான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.