கனடாவில் குரங்கம்மை தொடர்பில் அவசர எச்சரிக்கை
கனடாவில் குரங்கம்மை நோய்த் தொற்று தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டில் இதுவரையில் 745 பேர் குரங்கம்மை நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவோர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டியது இன்றியமையாத்து என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வைரஸ் தொற்று தொடர்பிலான புரிதல் இன்னமும் முழுமை பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரங்கம்மை நோய் உலக பொதுச் சுகாதார அவசர நிலைமையாக கருதப்பட வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் அறிவித்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் குரங்கம்மை நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
உலக அளவில் 78 நாடுகளில் 18000 பேருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.