இந்தியாவுக்கு விஜயம் செய்யும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஜி 20 மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா செல்லவுள்ளார். அங்கு , 3 நாட்களுக்கு அவரது இந்திய சுற்றுப்பயணம் அமையும் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் அதிபர் ஜோ பைடன், பேச்சு நடத்தவுள்ளார்.
சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை
இதன்போது பன்னாட்டு நிதி அமைப்பான ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னாட்டு நிதி அமைப்பும், உலக வங்கியும் வளரும் நாடுகளுக்கு கூடுதலான சேவை அளிக்க வேண்டும் என்று ஜோ பைடன் வலியுறுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அத்துடன் பன்னாட்டு நிதி நிலை வங்கிகளை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.