புடின் தொடர்பில் அமெரிக்க அதிபர் விடுத்த எச்சரிக்கை!
உக்ரேன் மீது அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து மிரட்டல்களை விடுக்கும்போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அதை வேடிக்கையாகச் சொல்லவில்லை என்றும், உண்மையில் அவ்வாறே செய்யக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்தார்.
இதற்கிடையே ரஷ்யா அணுவாயுதத் தாக்குதல்களை நடத்தினால், அவை போர்த்தந்திர ரீதியாக இருக்கக்கூடும் என்றும், சிறிய அளவில் மட்டுமே இருக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், அத்தகைய தாக்குதல்கள் மேலும் பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என பைடன் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் புட்டின் எப்போது போரை நிறுத்துவார் என்பதைக் கண்டறிய முயல்வதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.