வான்கூவார் மரதன் போட்டிக்கு மர்மப் பொருளினால் ஏற்பட்ட இடையூறு
கனடாவின் வான்கூவாரில் வருடாந்தம் நடைபெற்று வரும் மரதன் போட்டிக்கு மர்மப் பொருள் ஒன்றினால் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டி நடைபெற்ற பகுதியில் மர்மப் பொருள் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக போட்டி ஆரம்பிக்கப்படும் நேரம் ஒரு மணித்தியாலம் தாமதிக்கப்பட்டது.
போட்டி நடைபெறும் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த மர்மப் பொருள் குண்டாக இருக்கலாம் என சந்கேதம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் அந்த இடத்திற்கு அழைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடாத்தப்பட்டது.
தீவிர சோதனையின் பின்னர் இந்த மர்மப் பொருளினால் எவ்வித ஆபத்தும் கிடையாது எனவும் குண்டு அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டது.
மரதன் ஓட்டப் போட்டி நடைபெறும் பகுதியில் இந்த இந்தப் பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மர்மப் பொருள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், மர்மப் பொருளை யார் வைத்தார்கள் என்பது குறித்து கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த மரதன் ஓட்டப் போட்டி கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டு பீதி தொடர்பிலான சர்ச்சை தீர்க்கப்பட்டதன் பின்னர் போட்டி வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.