வான்கூவரில் பார்ட்டி கொண்டாடியவர்களுக்கு 11,000 டொலர் அபராதம் விதிப்பு
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வான்கூவரில் பார்ட்டி கொண்டாடியவர்களுக்கு 11,000 டொலர் அபராதம் விதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறன்று பொதுமக்கள் பலர் அளித்த புகாரின் அடிப்படையில் நள்ளிரவு 1 மணிக்கு 1200 மேற்கு ஜார்ஜியா தெரு பகுதிக்கு பொலிசார் சென்றுள்ளனர்.
ஆனால் குறித்த கட்டிடத்திற்குள் நுழைய பொலிசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிசார் தேடல் ஆணைப்பத்திரம் ஒன்றை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து சட்டப்படி உள்ளே நுழைந்த பொலிசார், அந்த பார்ட்டியை முன்னெடுத்து நடத்தியவருக்கு 2,300 டொலர் பிழை விதித்துள்ளனர்.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட 16 பேர்களுக்கு தலா 575 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
மட்டுமின்றி அங்கிருந்த சில பொருட்களையும் பொலிசார் ஆதாரத்திற்காக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.