வெள்ளை மாளிகை ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸார் பலி
அமெரிக்க பாராளுமன்றத்தில் நிகழ்ந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த பொலிஸார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.
எனினும், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.
இந்நிலையில், பைடன் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6ம் தேதி நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர். கட்டுக்கடாமல் திரளானோர் கூடிய நிலையில், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 4 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீசார் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.