கொரோனாவால் உயிரிழந்தவர்களை 5 வாரங்கள் வீட்டிலேயே வைத்திருக்கும் அவலம்!
பிரிட்டனில் கொரோனாவால் இறந்து போன உறவினர்களை அடக்கம் செய்ய 5 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், இறந்தவர்களை அடக்கம் பண்ணும் அளவுக்கு தயாராக முடியவில்லை என்றும் பிரிட்டன் மக்கள் கூறிவருகின்றனர்.
இறுதி சடங்கு மையம் நடத்தி வருபவர்களும் உடல்களை வைக்க இடமில்லாமல் போகும் நிலை ஏற்பட்டதாக கூறிவருகின்றனர்.
பிரிட்டனின் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிற சில இடங்களில் அன்புக்குரியவர்களை அடக்கம் செய்வதற்கு மக்கள் 5 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்னொரு பக்கம் உடலை பதப்படுத்தும் வேலையை செய்பவர்கள் கொரோனாவால் இருந்தவர்களின் உடல்களை கையாள வேண்டிய சூழ்நிலையால், தங்களுக்கும் நோய்தொற்று ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்துடன் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
மேலும் பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 90,000 இறுதிச் சடங்குகளை நடத்தியதாக மிரர் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.