புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்திய வடகொரியா
புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகளை வடகொரியா காட்சிப்படுத்தியுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில் நேற்று இரவு நடைபெற்ற இராணுவ அணி வகுப்பின் போது குறித்த நீர்மூழ்கி ஏவுகணைகள் காட்சிப்படுத்தியுள்ளது.
கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த இராணுவ அணி வகுப்பினை கோட் மற்றும் ஃபர் தொப்பி அணிந்திருந்த வடகொரியத் தலைவர் கிம்யொங் உன் பார்வையிடும் காட்சிகளையும் வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்த அணிவகுப்பில் அணிவகுப்பு படையினரின் வரிசைகள் மற்றும் டாங்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பல இராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம், நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள் ஒன்றன் பின் ஒன்றாக சதுக்கத்திற்குள் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் இது புரட்சிகர ஆயுதப்படைகளின் வலிமையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடகொரியாவின் கே.சி.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.