உக்ரைனில் போர் பதற்றம்; புறப்பட தயாராகுங்கள்; அமெரிக்கர்களை வலியுறுத்தும் தூதரகம்!
உக்ரைனில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள், இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்று வருகிறது.
அந்த வகையில், உக்ரைன் எல்லை பகுதியில் ரஷிய ராணுவம் நெருக்கடி கொடுத்து வருவதால் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க தூதரகம் அந்நாட்டு குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தி உள்ளது.
அதேவேளை இந்த வார தொடக்கத்தில், உக்ரைனுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.