ஈரானின் உச்ச தலைவரை கொல்ல முயன்றோம் ; ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி காமெய்னியை கொலை செய்ய குறிவைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில் "நாங்கள் கொமெய்னியை ஒழிக்க விரும்பினோம். ஆனால் எங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
பதுங்கு குழிக்குள் பதுங்கிய காமெய்னி
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காமெய்னி பதுங்கு குழிக்குள் பதுங்கி விட்டார் ஆரம்பகட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதிகளுக்கு பதிலாக புதிதாக வந்தவர்களுடனும் தொடர்புகளை அவர் துண்டித்துவிட்டார்" என்று அவர் கூறினார்.
மேலும் கொமெய்னியின் கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை மீண்டும் புதுப்பிக்கும் நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.