சீனாவில் விநோத சம்பவம்; மணமகனால் நின்று போன திருமணம்!
வடமேற்கு சீனாவில் பல ஆண்டுகள் காதலித்த பெண்ணை திருமணம் புரிவதற்கு மணப் பெண்ணுக்கான 300,000 யுவான் பணத்தை வழங்க முடியாததால் காதலன் அந்தப் பெண்ணை கைவிட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பெண்ணின் உடல் மற்றும் உழைப்பை உரிமையாக்குவதற்காகவே வடமேற்கு சீனாவில் மணப்பெண்ணுக்கு பணம் செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது.
எனினும் கன்சு மாகாணத்தில் வசிக்கும் குயின் என்ற ஆடவர் வருடாந்தம் 20,000 யுவான் வருமானத்தை பெறும் நிலையில் மணப்பெண்ணின் விலையாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை சேகரிக்க 15 ஆண்டுகள் எடுக்கும்.
அதேசமயம் திருமண சடங்கில் சீர்திருத்தங்களை கொண்டுவர சீன அரசு முயன்றபோதும் மணமகள் விலை சீன சமூகத்தில் தொடர்ந்து அதிகமாக உள்ளது.
குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் இந்த சிக்கலால் பலரும் தொடர்ந்து திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.