நிறவெறி - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் உலக சுகாதார அமைப்பு வேதனை!
நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் கூறி உள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் கூறியதாவது,
நிறவெறி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினால் தடுப்பூசி விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் அப்படியானவொரு மோசமான நிலைப்பாட்டில் இருக்கிறது.
புள்ளிவிவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், உலகில் தயாரிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளில், 45 சதவீத தடுப்பூசியை உலகில் 15 சதவீத மக்களை மட்டுமே தன்னகத்தே கொண்டிருக்கும் பணக்கார நாடுகள் வைத்துள்ளன.
மக்கள் தொகையில் 50 சதவிவீத மக்களை கொண்டிருக்கும் ஏழை மற்றும் மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடுகளுக்கு 17 சதவீத தடுப்பூசிகளே கிடைத்துள்ளது என கூறி உள்ளார்.