உக்ரைன் - ரஷ்யா போரில் யாருக்கு வெற்றி? ஜேர்மனி வெளியிட்ட தகவல்!
உக்ரைன் போரில் எந்த நாடும் வெற்றியீட்டப்போவதில்லை எனவும் நாங்கள் அமைதியையே நாடுகின்றோம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தாங்கள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என ஜேர்மனியின் புதிய சான்சிலர் ஒலாப் சோல்ஸுடன்(Chancellor Olab Souls) பேச்சு நடத்திய பின்னர் மோடி இவ்வாறு கூறியிருக்கிறார்.
சமீபகால பூகோள அரசியல் நிகழ்வுகள் உலகின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் எவ்வளவு இலகுவாக உடையக்கூடிய நிலையில் இருந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. மோதலின் ஆரம்பத்திலேயே உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தோம்.
சகலருக்கும் இழப்புகளைத் தரவுள்ள இந்தப் போரில் எந்தத் தரப்புக்கும் வெற்றி வாய்க்கப்போவதில்லை - என்றும் மோடி தெரிவித்திருக்கிறார். மூன்று நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ள இந்தியப் பிரதமர் நேற்று ஜேர்மனியின் தலைநகர் பேர்ளினை வந்தடைந்தார்.
அங்கு அவருக்கு மரியாதை அணிவகுப்பு நடத்தப்பட்டது.சான்சிலர் ஒலாப் சோல்ஸுடன் அவர் தனது முதலாவது அரசுமுறை நேரடிச் சந்திப்பை நடத்தினார்.
பேர்ளினில் வசிக்கும் இந்தியச் சமூகத்தவர்களையும் மோடி சந்தித்து உரையாடினார். மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய சான்சிலர் ஒலாப் சோல்ஸ்(Chancellor Olab Souls) , போரை நிறுத்துமாறு புடினுக்கு(Vladimir Putin) அழைப்பு விடுத்தார்.
இந்தப்போரை நிறுத்துங்கள், இந்த முட்டாள்தனமான கொலைகளை நிறுத்துங்கள், உங்கள் படைகளைத் திரும்பப்பெறுங்கள்என்று அவர் கோரினார்.