ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் வரக் கூடாது? தாக்குதலுக்கு பின் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து
ஈரானின் 3 அணுமின் நிலையங்களில், அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அங்கு (ஈரான்) ஏன் ஆட்சி மாற்றம் வர கூடாது என அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சண்டை முக்கிய கட்டத்தை எட்டியது. அமெரிக்கா நேற்று நேரடியாக தாக்குதல் நடத்தியும், மோதலில் இருந்து பின் வாங்காத ஈரான், சில மணி நேரங்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து சக்திவாய்ந்த, 'கொரம்ஷார் - 4' ஏவுகணையை ஈரான் வீசியது.
ஆட்சி மாற்றம்
இதன் பின்னர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்: கிரேட் பி-2 விமானிகள் மிசோரியில் பாதுகாப்பாக தரையிறங்கினர். சிறப்பாகச் செய்த பணிக்கு நன்றி. ஈரானில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் சிறப்புமிக்கது.
தாக்குதல்கள் கடினமாகவும், துல்லியமாகவும் இருந்தன. எங்கள் ராணுவத்தின் திறமை நிரூபிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானது அல்ல.
ஆனால் தற்போதைய ஈரான் ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.