வலிநிவாரணி மாத்திரைக்கு பதில் ஹெட்போனை விழுங்கிய பெண்! அமெரிக்காவில் வினோத சம்பவம்
அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் தவறுதலாக வலிநிவாரணிக்கு பதிலாக வயர்லெஸ் ஹெட்போனை விழுங்கிய விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் வசிக்கும் கார்லி என்ற பெண்ணே இச்சம்பத்திற்குள்ளாகியுள்ளார்.
இது குறித்து இவர் கூறுவதாவது, “நான் படுக்கையில் ஓய்வில் இருந்தேன். ஒரு கையில் வயர்லெஸ் ஹெட்ஃபோன்களும் மறு கையில் வலிநிவாரணி மாத்திரையும் வைத்திருந்தேன்.
தண்ணீர் பாட்டிலை எடுத்து மருந்துக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிவிட்டேன். நான் விழுங்கியது வலி நிவாரணி அல்ல என்பதை பின்னர்தான் உணர்ந்தேன்.
இருப்பினும், தான் மாத்திரைக்கு பதிலாக ஹெட்ஃபோனை விழுங்கியதை அவர் உணரவில்லை. 'நான் பாட்டு கேட்க எனது ஹெட்ஃபோன்களை தேடத் துவங்கினேன்.
பின்னர் அதன் லொகேஷனைத் தேடத் துவங்கினேன். அது நான் இருந்த இடத்தையே காண்பித்தது. இதற்குப் பிறகு நான் 'ஃபைண்ட் மை ஏர்போட்' இசையை வாசித்தேன். அதன் ஒலி என் வயிற்றில் கேட்டது” என்று தெரிவித்துள்ளார் கார்லி .
இதனை தொடர்ந்து பயந்து போன அந்த பெண் உடனடியாக மருத்துவரிடம் சென்றார்.
அதிர்ஷ்டவசமாக, ஹெட்போன்களை விழுங்கியதால் அந்தப் பெண்ணுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. உள் உறுப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது எக்ஸ்ரேயில் தெரிந்தது.
மேலும் இரண்டாவது நாளில் அறுவை சிகிச்சையின்றி ஹெட்ஃபோன்கள் இயற்கையான முறையில் வெளிவந்தது என்று கூறியுள்ளார்.