கனடாவில் நர்ஸ் வேடமிட்டு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய பெண்
கனடாவின் வான்கூவரில் பெண் ஒருவர் நர்ஸ் வேடமிட்டு மருத்துவமனை ஒன்றில் சுமார் ஓராண்டு காலம் பணியாற்றிய சம்பபம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வான்கூவர் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், 49 வயதான Brigitte Cleroux என்பவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் 2020 ஜூன் முதல் 2021 ஜூன் வரையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், அந்த மருத்துவமனையில் உண்மையில் பணியாற்றும் ஒரு செவிலியரின் பெயரிலேயே இவரும் பணியாற்றி வந்துள்ளார். இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த போலி செவிலியரால் வான்கூவரில் உள்ள எத்தனை நோயாளிகள் சிகிச்சை பெற்றார்கள் என்ற தகவல் இல்லை எனவும்,
ஆனால் குறித்த போலி செவிலியருடன் தொடர்பில் இருந்த நோயாளிகளை அடையாளம் காண, மாகாண சுகாதார சேவைகள் அதிகாரசபையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் Gatineau பகுதியை சேர்ந்தவர் Brigitte Cleroux. தற்போது அவர் மீது மோசடியில் ஈடுபட்டதாகவும், திட்டமிட்டு இன்னொருவரின் முகவரையில் இயங்கியதாகவும் கூறி வழக்கு பதிந்துள்ளனர்.
மட்டுமின்றி போலியான ஆவணங்களை தயாரித்தது, அதனால் ஆதாயம் தேடிக்கொண்டது, பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தது, தீங்கிழைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொலிஸ் காவலில் உள்ள அவர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் திகதி நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட உள்ளார்.