பிரான்ஸில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமராக பெண் ஒருவர் நியமனம்!
பிரான்ஸில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு மேக்ரான் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி வேட்பாளர் மரைன் லூ பென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய சூழலில் மேக்ரான் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அதை தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் பிரான்ஸில் நடைபெற்ற விழாவில் மேக்ரான் பிரான்ஸ் அதிபராக 2-வது முறையாக பதவியேற்றார்.
பிரான்ஸில் கடந்த 20 ஆண்டுகளில் அதிபராக இருக்கும் ஒருவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
இதேவேளை, பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி என்பவரை அதிபர் மேக்ரான் நியமித்துள்ளார்.
பிரான்சில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு பிரான்ஸ் வரலாற்றில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள 2-வது பெண் எலிசபெத் போர்னி ஆவார்.