தாயையும் 3 பிள்ளைகளையும் வாகனத்தில் மோதிக் கொன்ற சாரதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை
மூன்று பிள்ளைகளையும் அவர்களின் தாயையும் வாகனத்தில் மோதச் செய்து கொன்ற சாரதிக்குகு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் திகதி இந்த கோர விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவத்தில் 37 வயதான கரோலியா கியாசுலோ மற்றும் அவரது 6, 4 மற்றும் 1 வயதுகளையுடைய மகள்கள் உயிரிழந்தனர்.
ஆபத்தான வகையில் வாகனம் செலுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
பிரெடி ரொபர்ட்ஸன் என்ற சாரதிக்கே இவ்வாறு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும் குறித்த சாரதி 20 ஆண்டுகளுக்கு வாகனம் செலுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரொபர்ட்சன் மது போதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், சாட்சியங்களின் மூலம் இது நிரூபிக்கப்பட்டது.
இந்தக் குற்றச் செயலுக்காக பல தடவைகள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாகவும், தமது தவறுக்காக இந்த தண்டனையை ஏற்றுக் கொள்வதாகவும் ரொபர்ட்சன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.