கணவரைப் பிரிந்த தோழியை தனது வீட்டில் தங்கவைத்த பெண்... பின்பு ஏற்பட்ட காதல்! நடந்தது என்ன?
வெளிநாட்டில் ஒரு கணவருடன் சேர்ந்து ஒரே வீட்டில் இரண்டு இந்திய பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கணவனை விவாகரத்து செய்த இந்திய இளம்பெண் தனது தோழியின் கணவர் மீது காதல் கொண்ட நிலையில் மூவரும் சேர்ந்து ஒரே வீட்டில் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வசித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
31 வயதான பிடு கவுர் என்ற பெண்ணுக்கும், 36 வயதான ஸ்பீடி சிங் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு பிடு கவுர் கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் தனது பள்ளிகால நண்பர்களான ஸ்பீடி சிங் மற்றும் அவர் மனைவி சன்னியை பிடு சந்தித்துள்ளார்.
தங்கள் வீட்டில் வந்து ஒருவாரம் தங்கும்படி தம்பதி பிடுவிடம் கூற, அவரும் வந்து தங்கியுள்ளார். அப்போது ஸ்பீடிக்கும், பிடுவுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில், தற்போது ஒன்றாகவும் வாழ்ந்து வருகின்றனர். தற்போது 10 ஆண்டுகளாக மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ஸ்பீடி- சன்னி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளும், ஸ்பீடி – பிடு தம்பதிக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இவர்கள் மூவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் வழக்கத்திற்கு மாறான காதலை கொண்டுள்ளதால் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் அவர்களுடன் சரியாக பேசவில்லை என தெரிகிறது. மூவரும் ஒருவருக்கொருவர் எந்தவொரு ஒளிவு மறைவும் இன்றி வாழுவதால் தங்களுக்குள் பொறாமை மற்றும் பிரச்சினைகள் ஏற்படவில்லை என கூறுகின்றனர்.



