வடக்கு ஒன்றாரியோ சுரங்கத் திட்டத்தில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
வடக்கு ஒன்றாரியோவில் உள்ள 'அக்னிகோ ஈகிள்' (Agnico Eagle) நிறுவனத்தின் அப்பர் பீவர் (Upper Beaver) திட்டப் பணியின் போது, ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுரங்கத் திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"எங்கள் சக ஊழியர் ஒருவரின் மரணத்தை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எங்கள் குழு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது," என்று நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களுக்கு அக்னிகோ ஈகிள் குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு ஒன்றாரியோவில் உள்ள கோதியர் (Gauthier) பகுதியில் தங்கம் மற்றும் செப்புச் சுரங்கத்தை உருவாக்கும் பணியில் அக்னிகோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக மாகாண தொழிலாளர் அமைச்சகம் மற்றும் ஒன்றாரியோ மாகாண காவல்துறையிடம் (OPP) கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
எனினும், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.