கொரோனாவின் புதிய திரிபு தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை!
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட JN-1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, கேரளா மட்டுமின்றி சிங்கப்பூரிலும் இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா ஒமிக்ரான் வைரஸின் துணை வகை BA2.86 ஐ மாற்றியமைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட மிக வேகமாக பரவும் வைரஸ் வகை JN.1 என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், முகக்கவசம் அணிவதன் மூலமும், நல்ல சுகாதாரப் பழக்கங்களைப் பேணுவதன் மூலமும் இதனைத் தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது கோவிட்19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாகவும், அதற்கு காரணம் JN1 வைரஸ் திரிபு என்றும் தொற்றுநோயியல் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
புதிய கொரோனா துணை விடயத்தில் பொது சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு இன்னும் குறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.