உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரிப்பு!
அமெரிக்காவின் ஜனாதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவாகியுள்ளதால் தங்கம், வெள்ளி மற்றும் கிரிப்டோகரன்சியின் விலை அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் 97,594.85 அமெரிக்க டொலர் (ரூ.2.80 கோடி) என்று இருந்தது. விரைவில் 1 லட்சம் டொலரை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டொலரை இன்று தொட்டது. இலங்கை ரூபாயின் மதிப்புபடி 2.91 கோடியை தொட்டது.
இன்று எட்டியுள்ள புதிய உச்சம் கிரிப்டோ கரன்சி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதல் முறையாக 1 லட்சம் அமெரிக்க டொலரை தொட்டது. பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தலைவராக பால் அட்கின்சை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த நியமனத்துக்கு பிறகு தான் பிட்காயின் மதிப்பு புதிய மைல்கல்லை தொட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற வாரத்தில் கிரிப்டோ கரன்சி 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்தல் நாளில் கிரிப்டோகரன்சி 69,374 அமெரிக்க டொலராக இருந்தது. தற்போது 1,01,512 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.