சாலையில் தனியாக நிற்கும் பேன்ட்! என்ன காரணம் தெரியுமா?
அமெரிக்காவில் நிலவி வரும் உறைபனி காரணமாக, துவைத்து காயப்போட்டிக்கும் துணிகள், பனி கல்லாக மாறி சாலையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சூடான பேன்ட் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம்; ஆனால் உறைந்த பேன்ட்..! தெருக்களில், வாகன நிறுத்துமிடத்தில் என உறைந்த பேண்டின் புகைப்படங்களை ஆடம் என்பவர் வெளியிட, பலரும் இந்த சவாலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின், சிகாகோ பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் 2 அடி உயரத்துக்கு பனிக்கட்டி உறைந்து கிடக்கிறது. வீடுகளுக்கும், தோட்டங்களுக்கும் வெளியில் காய வைப்பதற்காக போடப்பட்ட துணிகள், உறைபனியால் அப்படியே பனி கல்லாக மாறி உள்ளன.
இதுபோல் ஒருவர் ஆன்லைனில் சவால் விடுக்க, பலரும் ஆர்வமுடன் இந்த சவாலில் பங்கேற்று வருகின்றனர். முதலில் துவைத்த பேண்டை துணியில் காய போடுகிறார்கள். பின் அது அப்படியே பனியில் இருகி கல் போன்று மாறிவிடுகிறது. இதற்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. அதனை எடுத்து பின் நிற்பது போல் வடிவம் கொடுத்து, சாலையில் நிற்க வைத்தால், அது மனிதர் போன்று நின்று கொள்கிறது.
இப்படி பலரும் அங்கு சவாலை ஏற்று, பேன்ட்களை தங்கள் தெருக்களில் நிற்க வைக்க, நகரமே ‘பேன்ட் கோலம்’ பூண்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.