ஒப்பந்தத்தை மீறியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டிய ஜெலென்ஸ்கி!
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நிலையில், தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசா மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாகவும், மேலும் இரண்டு ஏவுகணைகள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா வழக்கம் போல் ஒப்பந்தங்களை மீறுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)குற்றம் சாட்டி உள்ளார்.
ரஷ்யா என்ன சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும், அதை செயல்படுத்தாமல் இருக்க வழிகளைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒடேசா துறைமுகம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(Antonio Gutierrez) கண்டனம் தெரிவித்துள்ளார்.