பெருவில் கண்டெடுக்கப்பட்ட 1200 ஆண்டு முந்தைய மம்மி
பெரு நாட்டில் சுமார் 1200 ஆண்டு பழமையான பதப்படுத்தப்பட்ட மனித உடல்,தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள், இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பதப்படுத்தப்பட்ட உடலானது கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அதன் அருகே உணவு பொருட்கள் மற்றும் பணிகளும் கிடைத்துள்ளன. சக்லா மலைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகால மக்களிடைய, இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம், நடைமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குறித்த உடலின் துல்லியமான காலத்தை அறிந்திடும் வகையில் ரேடியோ கார்பன் முறையில் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.