பெருவில் வெடித்த கலவரத்தில் 20 பே பலி
பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ நீக்கப்பட்டதால், அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் பெருவின் அயச்சுச்சோ பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 52 பேர் காயமடைந்தனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்க விமானத் துப்பாக்கி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை இராணுவம் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், ஆங்காங்கே தீ வைப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதன் காரணமாக பதற்றம் அதிகரித்து வருவதால் ஐந்து விமான நிலையங்கள் மூடப்பட்டன.
அதிபர் பெட்ரோ காஸ்டில்லோ பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாக பெருவின் ஒம்பியூட்ஸ்மன் அலுவலகத்தின் தலைவர் இலியானா ரிவோலர் தெரிவித்தார்.