வெளிநாடொன்றை நோக்கி பறந்த 28 சீன போர் விமானங்கள்!
தங்கள் நாட்டை நோக்கி சீனா செவ்வாய்க்கிழமை 28 போா் விமானங்களை அனுப்பியதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுமுதல் சீனா அடிக்கடி போா் விமானங்களை அனுப்பிவரும் நிலையில் மிக அதிக எண்ணிக்கையிலான விமானங்களை முதல்முறையாக இப்போது அனுப்பியுள்ளது.
சீன விமானங்களை எதிா்கொள்ளும் வகையில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலமாக கண்டறியப்பட்டுள்ள தென்மேற்குப் பகுதியில் அந்நாடு வான்வழி ரோந்து படையை தயாா் நிலையில் வைத்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், தைவான் நீரிணை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீா்வுகாண வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் சீனா தைவானை நோக்கி போா் விமானங்களை அனுப்பியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் சாவோ லிஜியன் செவ்வாய்க்கிழமை கூறுகையில்,
ஜி7 நாடுகள் வேண்டுமென்றே சீன உள் விவகாரங்களில் தலையிடுகின்றன. தேசிய இறையாண்மை, மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றாா்.
1949-இல் உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. 2016-இல் தைவான் அதிபராக சாய் இங்-வென் தோவு செய்யப்பட்டதிலிருந்து, அந்நாடு மீது தூதரக, ராணுவரீதியாக சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதன் தொடா்ச்சியாக கடந்த ஆண்டுமுதல் தனது இறையாண்மையைப் பாதுகாப்பதாகக் கூறி தினமும் தைவானை நோக்கி போா் விமானங்களை சீனா அனுப்பி வருகிறது. கடந்த மாா்ச்சில் அதிகபட்சமாக 25 போா் விமானங்களை பறக்கச் செய்திருந்தது.