காபூலில் ஒரே வாரத்தில் 2வது முறை: பதற்றத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் இப்போது எந்த நேரமும், துப்பாக்கியுடன் திரிகிற தலீபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. அவர்களது ஆட்சி அதிகாரம்தான் அங்கு கொடி கட்டிப்பறக்கிறது. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தலைநகர் காபூலில் உள்ள பள்ளிக்கூடம் அருகே குண்டுவெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதே காபூல் நகரில் சலீம் கர்வான் பிரிவில் நேற்று சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் தலீபான்களின் கவச வாகனம் சிக்கினாலும் இதில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
இருப்பினும் தலைநகர் காபூலில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக குண்டுவெடித்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.