ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் மூவர் சடலமாக மீட்பு!
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் திகதியிருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடத்தி சென்றனர்.
இவ்வாறான நிலையில், காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
எனினும், இன்னும் 134 பேர் காசாவின் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது ஹமாஸ் ஆயுதக்குழுவால் கடத்தப்பட்ட இலியா டுலெட்னோ (வயது 28), நிக் பைசர் (வயது 19), ரொன் ஷெர்மன்
ஆகிய மூன்று பேரின் உடல்கள் காசாவில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.