திடீரென சிறைக்குள் மூண்ட கலவரம்: 5 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
மத்திய அமெரிக்க நாட்டிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாட்டிலிருக்கும் மோரோசொலியில் சிறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ரவுடிக் கும்பல்கள் உட்பட ஏராளமானோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கைதிகளுக்கிடையே திடீரென்று கலவரம் மூண்டதில் அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்தத் துப்பாக்கி சூட்டினால் 5 பேர் பலியானதையடுத்து பலரும் படுகாயமடைந்துள்ளர்கள்.
இந்த மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டினால் 15 கைதிகளுக்கும், ஒரு சிறைக் காவலருக்கும் குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து குண்டு பாய்ந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுகுறித்து பாதுகாப்பு ஆய்வாளர் கூறியதாவது, நாட்டில் சிறைக் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், சிறைக்காவலர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.