திருமணத்துக்குப் புறம்பான பாலியல் உறவுக்குத் தடை விதித்த நாடு
திருமணத்துக்குப் புறம்மான பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை இந்தோனேஷிய நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்தது.
அதேசமயம் புதிய சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் தம்பதியினர் இணைந்து வாழ்வதும் குற்றமாகும்.
அவ்வாறு திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதியினருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதேவேளை, திருமணத்துக்கு அப்பாலான பாலியல் உறவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில் இந்தோனேசியாவின் மேற்படி சட்டத்திருத்தங்களுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துளளன.
திருமணத்துக்கு அப்பாற்பட்ட பாலியல் உறவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை இந்தோனேஷிய வர்த்தக சங்கங்களும் விமர்சித்தன. அத்துடன் சுற்றுலாத்துறைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறப்பட்டது.
அதேவேளை , இந்தோனேஷியாவின் சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இச்சட்டத்தினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.