முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இல்லத்தில் திடீர் சோதனை
புளோரிடா மாநிலத்திலுள்ள தனது வீட்டில் எவ்.பி.ஐ. அதிகாரிகள் தனது பாதுகாப்புப் பெட்டம் ஒன்றை அதிகாரிகள் உடைத்து திறந்து தேடுதல் நடத்தியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரகசிய ஆவணங்கள் தொடர்பில் இச்சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது எமது தேசத்தின் இருண்ட தருணம், புளோரிடாவின் பாம் பீச்சிலுள்ள எனது அழகிய மர்ர ஏ லாகோ (Mar-a-Lago estate) இல்லத்தில் பெரும் எண்ணிக்கையான எவ்.பிஐ. உத்தியேகத்தர்களால் முற்றுகையிடப்பட்டு, சோதனை நடத்தப்படுகிறது’ என அறிக்கையொன்றில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவருக்கு முன்னர் இதுபோன்று நடந்ததில்லை எனவும் தான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய சுவடிகள் காப்பக ஆவணங்கள் கையாளல் தொடர்பாகவே இச்சோதனை நடத்தப்படுவதாக ட்ரம்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப் பொக்ஸ் நியூஸ் அலைவரிசைக்கு தெரவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ ஆவணங்களை ட்ரம்ப் கையாண்ட விதம் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்க நீதித் திணைக்களத்தை தேசிய சுவடிகள் திணைக்களம் கோரியிருந்தது.
இரகசிய ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை டரம்பின் மார் ஏ டாலோ இல்லத்திலிருந்து, தான் மீளப் பெற்றதாக தேசிய சுவடிகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க சட்டங்களின்படி, அமெரிக்க ஜனாதிபதிகள் தமது கடிதங்கள், செயற்பாடுகள் தொடர்பான ஆவணங்கள், மின்னஞ்சல்கள் அனைத்தையும் சுவடிகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால், ட்ரம்ப் பல ஆவங்களை தன்வசம் வைத்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.