ஆப்கானில் தொடர்ந்து ஒரு வாரமாக நடக்கும் தாக்குதல்: 18 பேர் பலி! பரபரப்பு சம்பவம்
ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில காலமாகவே தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் , ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது .
இந்த நிலையில் நஹ்ர்-இ-சர்ஜ் மற்றும் நாட் அலி மாவட்டங்களில் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
அந்த இடத்தில் பதுங்கி இருந்த தலிபான் அமைப்யை சேர்ந்தவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் இந்த அமைப்பை சேர்ந்த 18 பேர் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல் அக்சா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வருகிறது.