கனடாவில் பரிதாப கோலத்தில் தெருவில் அலையும் 10 வயது சிறுவனை தேடும் பொலிஸ்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரிதாபமான கோலத்தில் தெருவில் அலைவதாக கண்டறிந்த 10 வயது சிறுவன் தொடர்பில் பொலிசார் உதவி கோரியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்ட் பொலிசாரே குறித்த சிறுவன் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:45 மணியளவில் அபோட்ஸ்ஃபோர்ட் கிறிஸ்த்தவ பள்ளிக்கு அருகிலுள்ள 35000 பழைய கிளேபர்ன் சாலையில் அந்த சிறுவனை கடைசியாக பார்த்துள்ளனர்.
அந்த சிறுவன் தொடர்பில் அப்பகுதி மக்களை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் யாரும் அந்த சிறுவனுடன் பேசவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயப்பட்டிருக்கவில்லை, ஆனால் ஏதோ சோகம் அந்த சிறுவனை பாதித்துள்ளதாக கண்டறிந்ததாகவும், ஆனால் யாரிடமும் தமது நிலையை கூற விரும்பாதவனாகவும் அந்த சிறுவன் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மாயமானதாக இதுவரை புகார் ஏதும் பதிவு செய்யாத நிலையில், புகைப்படம் வெளியிட முடியாத சூழல் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சிறுவன் நலமாக இருப்பதாக தெரிந்து கொள்ள அந்த சிறுவனை கண்டு பிடிக்க வேண்டும் என்பது மட்டுமே தங்களின் நோக்கம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பார்வையில் சுமார் 10 வயதிருக்கலாம் என கூறியுள்ள பொலிசார், தங்கள் ஹெலிகொப்டரை பயன்படுத்தியும் அப்பகுதியில் தேடியுள்ளனர்.
மெலிந்த உடல் வாகுடன் வெளிர் நீல நிற ஹர்லி ஜாக்கெட் மற்றும் கருப்பு டிராக் பேன்ட்டையும் அணிந்திருப்பதாக கூறப்படும் சிறுவன், காலில் ஷூ அணிந்திருக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.