ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கானிஸ்தான் மக்கள்
ஈரான் நாட்டிலிருந்து ஒரே நாளில் 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மற்றும் நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில், அந்நாடு ஈரானுடன் இரண்டு முக்கிய எல்லைகளைப் பகிர்ந்து வருகின்றது.
இதில், மேற்கு ஹெராத்திலுள்ள இஸ்லாம் காலா எல்லை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாம் காலா எல்லை வழியாக 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் இன்று மேற்கு ஹெராத் மாகாணத்தினுள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நாடு திரும்பும் மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தலிபான் அரசு வழங்கி வருவதாக, அந்நாட்டின் தகவல் மற்றும் கலாசாரத் துறை தெரிவித்துள்ளது.