ஆமதாபாத் விமான விபத்து ; போயிங் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
குஜராத்தின் ஆமதாபாதில் ஏர் - இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 'போயிங்' மற்றும் எரிபொருள் சுவிட்ச் வழங்கிய 'ஹனிவெல்' நிறுவனங்கள் மீது, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஆமதபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, ஜூன் 12ல் ஏர் - இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது.
'போயிங் 787 - 8 ட்ரீம்லைனர்' விமானத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 242 பேர் பயணித்தனர்.
விசாரணை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அருகில் உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதி மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அதேசமயம், மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்த 19 பேர் பலியாகினர்.
மொத்தம், 260 பேரை பலிவாங்கிய விபத்து குறித்து ஏ.ஏ.ஐ.பி, எனப்படும் விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரணை நடத்தி வருகிறது.