அதிவேகமாக பரவ தொடங்கிய ஒமிக்ரோன்...அமெரிக்கா,நோர்வேயில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள்
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரோன் வைரஸானது தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரையில் சுமார் 24 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. தற்போது தீனப்ரிக்காவில் இருந்து நோர்வே திரும்பிய இருவருக்கு ஒமிக்ரோன் தோற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நோர்வேயின் மேற்கு கரை வட்டாரமான ஒய்கார்டனில் தோற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த புதிய வைரஸினைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தவுள்ளதாகும் நோர்வே தெரிவித்துள்ளது.
அதே சமயம் அமெரிக்காவில் தற்போது ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்கா னாய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.