மீண்டும் ஐ.நா.பொதுச் செயலாளரானார் அன்டனியோ குட்டரெஸ்
ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் அன்டனியோ-குட்டரெஸ் (Antonio Guterres) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres)ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஐக்கிய நாடுகள் சபையின் 9ஆவது பொதுச் செயலாளராக அன்டனியோ-குட்டரெஸ் (72) (Antonio Guterres ) பதவி வகித்து வருகிறார்.
இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டனியோ குட்டரெசையே (Antonio Guterres ) மீண்டும் பொதுச் செயலாளராக்குவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா.வின் பொதுச்சபைக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது கூட்டத் தில் அன்டனியோ-குட்டரெஸ் (Antonio Guterres ) ஐ.நா.சபை பொதுச் செயலாள ராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
அதன்படி அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என்பது குறிப்பிட்த்தக்கது.