தடுப்பூசிக்காக வான்கூவர் தம்பதியின் செயல்: நீதிமன்றம் அதிரடி
தடுப்பூசி பெறுவதற்காக வான்கூவர் தம்பதி ஒன்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது நிரூபணமான நிலையில் நீதிமன்றம் பிழை விதித்துள்ளது.
வான்கூவரில் பிரபலமான பணக்கார தம்பதி ஒன்று இந்த ஆண்டு துவக்கத்தில் கனடாவின் Yukon பிராந்தியத்திற்கு சென்று முறைகேடாக தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
இந்த வழக்கில் சிக்கிய Rod மற்றும் Ekaterina Baker தம்பதிக்கு தற்போது 1150 டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் Baker தம்பதி தனி விமானத்தில் Yukon பிராந்தியத்தில் உள்ள Beaver Creek பகுதிக்கு சென்று முறைகேடாக தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.
மட்டுமின்றி, 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்துதல் விதியை பின்பற்ற மறுத்ததால், இருவருக்கும் தலா 575 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
தடுப்பூசிக்காக முறைகேடில் ஈடுபட்ட Baker தம்பதியின் செயல் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதாக Yukon பிராந்திய மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் Yukon பிராந்தியத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், Baker தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையிலேயே நீதிமன்றம் Baker தம்பதிக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.