தயக்கம் காட்டும் கனடா பெண்கள்; ஆய்வறிக்கையில் வெளியான தகவல்
கனடாவில் இன்னும் 20% மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு தயக்கம் காட்டுவதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கனடாவில் ஆயிரம் பேர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், 82% மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக அல்லது பெற காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சுகாதார நிபுணர்களின் கருத்துகள் அடிப்படையில், ஒவ்வொரு பிராந்தியத்திலும் 90% மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மட்டுமே, நாம் கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றதாக கருத முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, 9% மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி பெற்றுக்கொள்வதாக இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளனர். கனடாவை பொறுத்தமட்டில் தினசரி அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மக்களுக்கு அளித்த நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இதனாலேயே, மொத்த மக்கள் தொகையில் தகுதியான 75% மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி 18% மக்கள் முழுமையாக இரு டோஸ்களும் பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.
பெடரல் சுகாதாரத்துறையை பொறுத்தமட்டில் 20% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மட்டுமே கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியான தளர்வுகளை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், கனடாவில் தடுப்பூசிக்கு தயக்கம் காட்டுபவர்களில் அதிகமானோர் பெண்கள் என்றே தெரிய வந்துள்ளது. இதில் கண்டிப்பாக தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவிப்பவர்கள் 11% பெண்கள் எனவும் 6% ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.