11 ஆயிரத்து 315 அதிகாரிகளை தண்டித்த சீனா! காரணம் இதுதான்
சீனாவில் சிக்கன விதிகளை மீறியதற்காக 11 ஆயிரத்து 315 அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளள சம்பவம் இட்ம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டில் பணியிடங்களில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவோரை எதிர்கொள்ளும் வகையில் 8 திட்டங்கள் கொண்ட சிக்கன விதிகளை அக்கட்சி வெளியிட்டது. அத்துடன் அதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கட்சி கூறியது. இந்த நிலையில், ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஒழுங்குமுறை ஆய்வுக்கான மத்திய ஆணையம் மற்றும் தேசிய கண்காணிப்பு ஆணையம் ஆகியவை வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையின்படி நாட்டில் கடந்த ஏப்ரலில் 11,351 பேர் ஊழல் ஒழிப்பு துறையால் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி மற்றும் அரசின் நன்னெறிகளை மேம்படுத்தும் வகையிலான 8 திட்டங்களை கொண்ட விதிகளை அவர்கள் மீறியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது மொத்தம் 7,441 வழக்குகள் பதிவாகிவுள்ளன. அவர்களில் 7,603 பேர் மீது கட்சி ஒழுங்கு அல்லது நிர்வாக ரீதியிலான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ளவர்களில் 6,411 பேர் அதிகாரத்துவ நடைமுறைகளுக்காகவும் 4,940 பேர் சுயநலம் சார்ந்த செயல்கள் மற்றும் ஆடம்பர நடவடிக்கைகளுக்காகவும் தண்டிக்கப்பட்டு உள்ளதாக சீன ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.