மகனை கனடாவுக்கு அனுப்பி விட்டு மருமகளிடம் தவறாக நடந்துகொண்ட மாமனார்...

Balamanuvelan
Report this article
கனடாவில் வாழும் ஒரு நபர் மீது, தன் மருமகளை வன்புணர்ந்ததாக புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பஞ்சாபின் லூதியானா மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்த இரண்டாவது நாளே, அவரது கணவர் தனது மனைவியை விட்டு விட்டு கனடா சென்றிருக்கிறார்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்த 28 வயது பெண்ணை மட்டும் வீட்டில் விட்டு விட்டு, அவரது மாமனாரும் பிற உறவினர்களும் கனடா சென்றுள்ளார்கள்.
தன்னை மட்டும் அவர்களுடைய வீட்டில் விட்டுச் சென்றும், தனது உறவினர்கள் தன்னை சந்திக்கக்கூடாது என தனது கணவரின் உறவினர்கள் தனக்கு தடை விதித்ததாகக் கூறுகிறார் அந்தப் பெண்.
இதற்கிடையில், அந்தப் பெண்ணின் மாமனார் மட்டும் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார். அப்போது ஒருநாள் அவர் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, தன்னை வன்புணர்ந்ததாக தெரிவிக்கும் அந்தப் பெண், தன்னை சீரழித்ததை புகைப்படமும் வீடியோவும் எடுத்த தன் மாமனார், தன்னை அதைக் காட்டி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
பிறகு மீண்டும் அவர் கனடாவுக்கு திரும்பிச் சென்றுவிட்ட போதும், அவர் ஆபாச குறுஞ்செய்திகளை தனக்கு அனுப்பிவந்ததாக தெரிவிக்கும் அந்தப் பெண், தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, இதெல்லாம் சகஜம் என்று கூறினாராம்.
அந்தப் பெண் இப்போது நடந்தவற்றைக் குறித்து பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
அவரது மாமனார் மீது, மருமகளை வன்புணர்ந்ததாக பொலிசார் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.