பச்சிளம் குழந்தையை பலியெடுத்த இலங்கையின் கோர நெருக்கடி!

Sulokshi
Report this article
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, பிறந்து இரண்டே நாளான பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்துயரச் சம்பவம் ஹல்தும்முல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இதனையடுத்து குழந்தையை, உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்கவில்லை.
குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல, பெற்றோர் ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும்.
எனினும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை உயிரிழந்துவிட்டது.
As a father I can only imagine what they must be going through ? If @GotabayaR read this and have any guilt should resign immediately as he was directly responsible for this situation and everyone els who was part of this administration… https://t.co/ICz0HlPnwl
— Mahela Jayawardena (@MahelaJay) May 22, 2022
அதேசமயம் ஒருமணிநேரம் தாமதம் ஏற்படாது போயிருந்தால் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவை அடுத்து, இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்த துயர சம்பவம் குறித்து மருத்துவர் Dr.Shanaka Roshan Pathirana வின் முகநூல் பதிவிட்டுள்ளதாவது,
இது தியதலாவ மருத்துவமனையில் எனது 86 தாவது மரண பரிசோதனையும் மிக வேதனைக்குரிய மரணமுமாகும். பிறந்து இரண்டே நாட்களான இந்தச்சிசுவை தாய்ப்பால் பருகாமல் மஞ்சள் நிறமாகி இரத்தத்தில் சக்கரை அளவு குறைந்ததால் ஹல்தும்முல்ல வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்காக தந்தை பெற்றோல் தேடி ஒரு மணி நேரம் அலைந்து திரிந்து கொண்டுவரப்பட்டபோது குழந்தையின் இரத்தத்தில் சக்கரை அளவு 22mg/dl.
அங்கிருந்து தியதலாவ மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதே குழந்தை மூச்சுத் திணறியபடி இருந்திருக்கிறது. தியதலாவ வைத்தியசாலை ETU வில் அனுமதிக்கப்பட்டு அங்கே குழந்தை இறந்து விட்டது. அந்த ஒரு மணி நேரம் பிந்தியிருக்காவிட்டால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம். தங்களுக்கு எதுவும் நேரும்வரை அடுத்தவர் துன்பம் நமக்கு புரியாது.
ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து இரண்டு நாட்கள் கையில் கொஞ்சிய பிஞ்சுக் குழந்தை ஒரு லீற்றர் பெற்றோல் இல்லாததால் இறந்து போனது என்கிற துக்கம் அந்தப் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் வதைக்கப் போகிறது.
இறந்த பிஞ்சு உடலை வெட்டுவதற்கே துயரம். அங்க அவயவங்கள் எல்லாம் எந்தக் குறையுமற்று பிறந்திருந்த குழந்தை.
இந்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் சாபம் உண்டாகட்டும். பின்னர் இந்த சாபக்கேடான நாட்டில் கேடுகெட்ட ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில் வாழ்வதை விட அந்தக் குழந்தை இறந்ததே நல்லதென்று தோன்றியது என அவர் பதிவிட்டுள்ளார்.